செய்திகள் தமிழ் தொடர்புகள்
9 ஆண்டுகளாக வரி கட்டாத ஜெயலலிதா வீட்டுக்கு சீல்
ஹைதராபாத்:
கடந்த 9 ஆண்டுகளாக வரி பாக்கி செலுத்தாததற்காக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம், யூசுஃப்கூடா சர்க்கிள் - 38, ஸ்ரீநகர் காலனியில் 4 அடுக்கு மாடி சொகுசு வீடு உள்ளது.
இந்த வீட்டின் எண் 8-3-1099-ஏ ஆகும். இந்த வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் அலுவலகத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. அவர்கள் வாடகை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், ”கடந்த 2017ம் ஆண்டு முதல் இதை வீடாக உபயோகப்படுத்தி வருகிறோம். அதன்படி வரி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜெயலலிதாவின் உறவினர் தீபக் ஜெயக்குமார், ஹைதராபாத் மாநகராட்சிக்கு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த வீட்டுக்கு யாரும் வரி செலுத்த முன்வராத காரணத்தால் இதுவரை ரூ.82,91,822 வரி பாக்கி செலுத்த வேண்டி உள்ளது.
இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத் மாநகராட்சியின் உதவி ஆணையர் சுரேஷ், ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால், மார்ச் 31ம் தேதி இதற்கான கடைசி நாள் என்பதால், இதுவரை யாரும் அந்த வீட்டுக்கு வரி செலுத்தவில்லை. இதையடுத்து, ஹைதராபாத் மாநகராட்சி ஏஎம்சி பால்ராஜ் தலைமையில் சென்ற ஊழியர்கள் ஜெயலலிதாவின் வீட்டிற்கு ‘சீல்’ வைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 10:52 am
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி: அண்ணாமலை வற்புறுத்திக் கேட்கும் அந்த 2 தொகுதிகள்
April 1, 2026, 7:59 am
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தகிக்கும் வெப்ப அலை வீசும்: பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
March 31, 2026, 7:16 am
சுமார் ரூ.624 கோடிக்கு சொத்து - வெளியான விஜயின் வேட்புமனு
March 30, 2026, 6:34 pm
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்
March 30, 2026, 6:09 pm
