நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹிஷாமுடின், கைரியின் விண்ணப்பங்கள் குறித்து ஏப்ரல் 17இல் நடைபெறும் அம்னோ உச்சமன்றத்தில் விவாதிக்கப்படும்

கோலாலம்பூர்:

ஹிஷாமுடின், கைரியின் விண்ணப்பங்கள் குறித்து  ஏப்ரல் 17இல் நடைபெறும் அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

செம்பரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின்  ஹுசைன், கைரி ஜமாலுடின் உள்ளிட்ட பல முன்னாள் அம்னோ தலைவர்கள் கட்சியில் மீண்டும் இணைவதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த  விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் உச்ச மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இந்த விண்ணப்பம் மீதான முடிவு கூட்டத்தில் அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று உதவித் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் கூறினார்.

நான் இந்த விஷயத்தை 'ருமா பங்சா'வின் உணர்வுடனும், பெருநாள், ரமலான் உணர்வுடனும் உச்ச மன்றக் கூட்டத்திற்குக் கொண்டு வருவேன். 

கட்சித் தலைவரின் அறிக்கையும் இந்த விஷயத்தை சாதகமாகவே பார்க்கிறது.

மேலும் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset