செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது
சென்னை:
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதன்படி, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருகிற 30ஆம் தேதி (நாளை) முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆகும்.
அரசு விடுமுறை காரணமாக, மார்ச் 30, ஏப்ரல் 2, 4, 6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு வர வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சி வேட்பாளராக இருந்தால் அவரை, அவர் போட்டியிடும் தொகுதியை சேர்ந்த ஒரு வாக்காளர் முன்மொழிய வேண்டும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர் அல்லது சுயேச்சை வேட்பாளர் என்றால் அந்த தொகுதியை சேர்ந்த 10 வாக்காளர்கள் அவரை முன்மொழிய வேண்டும்.
ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 8:45 pm
திமுகவின் 164 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார் மு க ஸ்டாலின்
March 28, 2026, 6:54 pm
போடி தொகுதியில் திமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம்: ஸ்டாலின் அறிவிப்பு
March 27, 2026, 10:08 am
அதிக விளைச்சலால் தக்காளி விலை சரிவு: விவசாயிகள் பாதிப்பு
March 26, 2026, 10:40 pm
“அதிமுக, திமுக இடையே மறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தம்”: வெளுத்து வாங்கும் சீமான்
March 26, 2026, 3:51 pm
பாஜக வேட்பாளர்கள் உறுதிசெய்யும் ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தார்
March 26, 2026, 3:43 pm
சோனியா காந்தி விரைந்து நலம் பெற வேண்டுகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு
March 26, 2026, 7:02 am
கடந்தமுறை பாஜக வென்ற இடங்களில் இம்முறை சீட் தரப்படவில்லை
March 24, 2026, 11:39 pm
