நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதுகாப்பு பணம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் பதவி விலக உத்தரவு

கோலாலம்பூர்:

பாதுகாப்புப் பணம் கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் பதவி விலக உத்தரவிடப்பட்டுள்ளது.

கெஅடிலான் கூட்டரசுப் பிரதேச தலைமை மன்றத்தின் தலைவர் டத்தோ அஸ்மான் அபிடின் இதனை கூறினார்.

ஒரு வணிக வளாகத்தில் பாதுகாப்புப் பணம் கோரியதாகக் குற்றம் சாட்டும்  வீடியோ வைரலானது.

இதைத்  தொடர்ந்து,  வாங்சா மாஜு கூட்டாட்சிப் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் தத்தமது பதவிகளிலிருந்து உடனடியாகப் பதவி விலகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

ஆர். விஜயந்திரன், ஜி. பாரதிதாசன் ஆகியோருக்கு எதிரான இந்த முடிவு நேற்று நடைபெற்ற கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் அரசியல் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

போலிஸ் விசாரணை செயல்முறைக்கும், கட்சியின் உள் விசாரணைக்கும் எந்தவிதத் தலையீடும் இன்றி முழுமையான அணுகலை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மிரட்டிப் பணம் பறித்தல், பாதுகாப்புப் பணம் பெறுதல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு உறுப்பினரையோ அல்லது பிரதிநிதியையோ கட்சி பொறுத்துக்கொள்ளாது, பாதுகாக்கவும் செய்யாது.

நீதி கட்சிக்குள்ளிருந்தே தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset