செய்திகள் உலகம்
ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாய்லாந்து சரக்குக் கப்பலான மயூரி நாரி தாக்கப்பட்டது
பேங்காக்:
ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட தாய்லாந்து சரக்குக் கப்பல் ஒன்று, தற்போது ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய செய்தி நிறுவனமான தஸ்னிமின் அறிக்கையின்படி,
மயூரி நாரி கப்பலின் பின்பகுதி அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், அதனால் இயந்திர அறையில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஓமன் கடற்படையால் இருபது கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலைச் சேதப்படுத்திய இந்தத் தாக்குதல் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
பிரிட்டிஷ் இராணுவத்தின் கீழ் செயல்படும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்கியதைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு வர்த்தகக் கப்பல் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 11:07 am
சுங்கச்சாவடி அமைப்பு மூலம் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துகிறது ஈரான்
March 27, 2026, 10:38 am
“கழிப்பறை காகிதப் பற்றாக்குறையால் பதற்றம் தேவையில்லை”: மக்களிடம் ஜப்பான் அரசின் வேண்டுகோள்
March 27, 2026, 10:32 am
மேற்காசிய மோதல்: ஈரான் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்கள் ஒத்திவைக்கிறார் டிரம்ப்
March 26, 2026, 5:33 pm
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
March 26, 2026, 4:30 pm
சிங்கப்பூர் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு முக அடையாள முறை அறிமுகம்
March 26, 2026, 4:27 pm
ஜப்பான் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்: மதிய உணவால் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
March 26, 2026, 4:22 pm
தாய்லாந்தில் எரிபொருள் ஏற்றுமதிக்கு அரசு கடும் கட்டுப்பாடு
March 26, 2026, 4:20 pm
