நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாய்லாந்து சரக்குக் கப்பலான மயூரி நாரி தாக்கப்பட்டது

பேங்காக்:

ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட தாய்லாந்து சரக்குக் கப்பல் ஒன்று, தற்போது ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய செய்தி நிறுவனமான தஸ்னிமின் அறிக்கையின்படி,

மயூரி நாரி கப்பலின் பின்பகுதி அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், அதனால் இயந்திர அறையில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஓமன் கடற்படையால் இருபது கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலைச் சேதப்படுத்திய இந்தத் தாக்குதல் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.

பிரிட்டிஷ் இராணுவத்தின் கீழ் செயல்படும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்கியதைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு வர்த்தகக் கப்பல் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset