நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

“வேலைக்கு மக்கள் நடந்து செல்கிறார்களா”?: பிலிப்பைன்ஸ் பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

மனிலா: 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பிலிப்பைன்ஸில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் வேலைக்கு நடந்து செல்வதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை அந்நாட்டு மக்கள் மறுத்துள்ளனர். குறிப்பாக, கியூசான் சிட்டியின் 'காமன்வெல்த் அவென்யூ' பகுதியில் மக்கள் நடந்து செல்லும் காணொலியைப் பகிர்ந்து, வெளிநாட்டவர் ஒருவர் பதிவிட்ட தவறான தகவலே இந்த சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.

உண்மையில், அங்குள்ள மக்கள் வேலைக்கு நடந்து செல்லவில்லை என்றும், மாறாகப் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்காகக் காத்திருப்பதாகவும் பிலிப்பைன்ஸ் மக்கள் விளக்கமளித்துள்ளனர். 

போக்குவரத்து நெரிசல், வாகனப் பற்றாக்குறை காரணமாக, மக்கள் தங்களுக்குத் தகுந்த வாகனத்தைப் பிடிப்பதற்காகவே சிறிது தூரம் நடந்து செல்வதாகவும், இது அங்கு வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து அங்குள்ள போக்குவரத்து சங்கங்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சாலைகளில் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதே தவிர, எரிபொருள் இல்லாததால் மக்கள் நடக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, தொடர்ந்து மூன்றாவது வாரமாக எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் போக்குவரத்துத் துறையினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது பிலிப்பைன்ஸிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல வாகன ஓட்டிகள் தங்கள் சேவையைத் தொடர முடியாமல் தவித்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset