நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மேற்காசிய மோதல்: ஈரான் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்கள் ஒத்திவைக்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: 

மேற்காசிய பதற்றங்களைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், ஈரானின் எரிசக்தி இடங்களைத் தாக்கும் திட்டங்களை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்படுவதாக டிரம்ப் தமது ட்ருத் ஊடகத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

"ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இரவு 8 மணி வரை ஏப்ரல் 6, 2026 திங்கள் வரை 10 நாட்களுக்கு எரிசக்தி நிலையங்களை அழிக்கும் காலகட்டத்தை ஒத்திவைப்பதாக இந்த அறிக்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்துள்ளது.

"பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, போலி ஊடக அறிக்கைகளுக்கு மாறாக அவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஒத்திவைப்பு வெள்ளியன்று முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் வியாழக்கிழமை மாலை பங்குச் சந்தைகள் மூடியவுடன் இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வாஷிங்டன், தெஹ்ரான் பதற்றங்களைத் தணிக்கும் கலந்தாலோசனைகளைத் தொடரும் நிலையில், இந்த ஒத்திவைப்பு ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset