நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாஜக வேட்பாளர்கள் உறுதிசெய்யும் ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தார் 

சென்னை:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையொப்பமான நிலையில், நேற்று தொகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது.

பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில மூத்த தலைவர்கள் கலந்துகொண்டிருக்கும் நிலையில், அண்ணாமலை பங்கேற்கவில்லை. கூட்டத்தை அவர் புறக்கணித்துள்ளார்.

இதனிடையே, அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அரவக்குறிச்சி அல்லது கோவை சிங்காநல்லூர் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.

இதன்மூலம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset