செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை:
கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மே 15, 19, 23, நேற்று மே 25, என நான்கு முறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 5-வது முறையாக இன்று மே 26 காலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.108.01-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.99.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருகிறது. 4 மாநில தேர்தல் வரை அமைதி காத்த ஒன்றிய அரசு இப்போது அதிகரித்துவரும் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அக்கறை காட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
