செய்திகள் உலகம்
பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ஆசிரியை உட்பட இருவர் உயிரிழப்பு
மெக்சிகோ சிட்டி:
மேற்கு மெக்சிகோவின் மிச்சோகன் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 15 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண் ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாசரோ கார்டெனாஸ் துறைமுக நகரில் அமைந்துள்ள 'மகரென்கோ' பள்ளியில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. கல்லூரியில் சேரத் தயாராகிக் கொண்டிருந்த அந்த உயர்நிலைப் பள்ளி மாணவன், ஒரு துப்பாக்கியைப் பயன்படுத்தி இத்தாக்குதலை நடத்தியதாகப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆசிரியை என்றும், மற்றொருவர் பள்ளியின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றியவர் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலில் பல குண்டுகள் பாய்ந்த நிலையில் இருவரின் உடல்களையும் மீட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, தற்போது அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலுக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மிச்சோகன் மாநிலம் பொதுவாகவே கடத்தல், போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளுக்குப் பெயர் பெற்றது என்றாலும், மெக்சிகோவில் பள்ளி வளாகங்களுக்குள் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடமிருந்து முறையான விளக்கங்கள் இன்னும் வெளியாகவில்லை.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 4:06 pm
மேற்காசிய மோதல்: உர இடையூறு உலக உணவு விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்: WTO
March 25, 2026, 3:04 pm
அமெரிக்காவை உலுக்கிய மாற்றுத்திறனாளி வீரரின் கொடூரச் செயல்
March 25, 2026, 12:49 pm
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸின் அதிரடி திட்டம்
March 25, 2026, 12:41 pm
போரினால் சிதைந்த ஆன்மீகச் சின்னம்: அழியும் நிலையில் 'பிரே விஹியர்' வரலாற்றுத் தலம்
March 25, 2026, 12:07 pm
மூச்சுவிடக் கூடத் தகுதியில்லாத நாடா?: உலகின் மிக மோசமான காற்றைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் முதலிடம்
March 25, 2026, 9:52 am
குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: எரிபொருள் தொட்டியில் தீ
March 25, 2026, 9:51 am
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: தாய்லாந்து கப்பலுக்கு பயண அனுமதி கிடைத்தது
March 25, 2026, 9:48 am
