நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: தாய்லாந்து கப்பலுக்கு பயண அனுமதி கிடைத்தது

பாங்காக்: 

தாய்லாந்தின் ஒரு எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இருநாடுகளின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த அனுமதி கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம், இரண்டு கப்பல்களின் விவரங்களை ஈரானிடம் வழங்கியதில், அதில் பங்க்சாக் நிறுவனத்தின் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மார்ச் 23ஆம் தேதி, அந்த கப்பல் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணையை கடந்து தற்போது தாய்லாந்து நோக்கி திரும்பி வருகிறது. மற்றொரு கப்பலுக்கும் இதேபோன்ற அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மார்ச் 11ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து சரக்கு கப்பலில் காணாமல் போன மூன்று கடற்படை பணியாளர்களைத் தேடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்டாலும், இதற்கான உறுதி இன்னும் பெறப்படவில்லை.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset