நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்-குர்ஆனை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்

குவாந்தான்:

3ஆர் தொடர்பான விடயங்களைத் தொட்ட மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை சமீபத்தில் நிறைவடைந்தது.

கடந்த மார்ச் 9 அன்று கூடிய பல்கலைக்கழக மாணவர் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அந்த மாணவர் தவறு செய்தார் எனக் கண்டறிந்ததாக அதன் துணைவேந்தர் யதிமா அலியாஸ் கூறினார்.

இந்த ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில், அந்த மாணவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, பல்கலைக்கழகம் விதிகள் (மாணவர் ஒழுங்கு) 2024-இன் விதி 58-இன் படி பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த முடிவு, பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில், மாணவர்கள் அல்லது ஊழியர்கள் என பல்கலைக்கழகவாசிகள் அனைவரும் தங்கள் அனைத்துச் செயல்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் இந்த நாட்டில் இனப் பதற்றத்தைத் தூண்டி, பொது நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவிற்கு 3ஆர் தொடர்புபடுத்தி வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கத்தைப் பரப்புவதில் தனது கட்சி ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்பதில் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset