நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவின் சுல்தான், அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அரசு ஊழியர்களுடன் அய்டில்ஃபித்ரி வரவேற்பு

அலோர் ஸ்டார்: 

கெடா சுல்தான் அல் அமீனுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷா இன்று இங்குள்ள இஸ்தானா அனாக் புக்கிட்டில் அரசு ஊழியர்களுடன் அய்டில்ஃபித்ரி வரவேற்பில் கலந்து கொண்டார்.

கெடாவின் சுல்தானா, சுல்தானா மலிஹா தெங்கு ஆரிஃப்; கெடாவின் ராஜா முடா, தெங்கு சரஃபுதீன் பத்லிஷா சுல்தான் சல்லேஹுதீன்; கெடாவின் ராஜா புவான் முடா, சே புவான் முடா ஜாஹிடா முஹம்மத் ஆரிஃப்; கெடாவின் துங்கு மஹ்கோத்தா, துங்கு ஷாஸுத்தீன் ஆரிஃப் சுல்தான் சல்லேஹுதீன்; கெடாவின் துங்கு புவான் மஹ்கோத்தா, சே புவான் நூர் ஜூலி அரிஃப் ஆகியோரும் பாலாய் சாந்தாப்பான் பெசாரில் நடந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்.

கெடா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் சனுசி முஹம்மத் நார், கெடா மாநில செயலாளர் டத்தோ ஸ்ரீ நொரிசான் கசாலி, மலேசிய தேசிய செய்தி முகமை (பெர்னாமா) தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுகா நூர்-உல் அஃபிடா கமலுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 கெத்துப்பாட், லெமாங், மாட்டிறைச்சி ரெண்டாங், அயாம் குசி, சோட்டோ அயாம், நாசி மின்யாக் ஆகியவை வரவேற்பில் பறிப்மாரப்பட்டன.

பின்னர், மாட்சிமை பொருந்திய மன்னரும் அரச குடும்ப உறுப்பினர்களும் விருந்தினர்களுடன் கலந்து கொள்ள நேரம் ஒதுக்கி, பாராட்டு, நல்லெண்ணத்தின் அடையாளமாக கலந்து கொண்ட அரசு ஊழியர்களுக்கு டுயிட் ராயாவை வழங்கினர்.

இந்த நிகழ்வு அய்டில்ஃபித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, அன்பான, சுமுகமான சூழ்நிலையில் அனைவருக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளையும் பரஸ்பர மரியாதையையும் பிரதிபலித்தது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset