செய்திகள் மலேசியா
30 ஆண்டுகளாக தலசீமியா நோயுடன் போராடும் 46 ஆடவர்
கோலாலம்பூர்:
தலசீமியா நோயுடன் பிறப்பது ஒருவரின் விருப்பமல்ல, ஆனால் அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் சிகிச்சையைத் தொடர்வதே பலரின் அன்றாட வாழ்வாக உள்ளது.
கோலாலம்பூரைச் சேர்ந்த 46 வயது நூர் அஸ்மி ரம்லி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நோயுடன் போராடி வரும் தனது வலியைப் பகிர்ந்துள்ளார். தனது 15 வயதில் நோய் கண்டறியப்பட்டதில் இருந்து, உடல் மெலிந்து வயிறு வீக்கமடைந்தது முதல், ஒரு கண்ணின் பார்வையை இழந்தது வரை பல கடுமையான உடல்நலச் சிக்கல்களை அவர் சந்தித்துள்ளார்.
தற்போது நாளொன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை உட்கொள்ளும் அவர், சுமார் ஆறு மணிநேரம் நீடிக்கும் இரத்த மாற்றச் சிகிச்சையையும் (Blood Transfusion) மேற்கொண்டு வருகிறார்.
"இரத்த மாற்றத்தின் இறுதி நிலையின் போது நரம்புகளில் ஏற்படும் வலி தாங்க முடியாதது" என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். நுரையீரல், கல்லீரல் தொற்று எனப் பலமுறை உயிருக்கே ஆபத்தான நிலைக்குச் சென்றபோதும், மன உறுதியுடன் அவர் மீண்டு வந்துள்ளார்.
இது குறித்து மலேசிய தேசிய பல்கலைக்கழக (UKM) மருத்துவமனையின் இரத்தவியல் நிபுணர் பேராசிரியர் டாக்டர் நூர் ரஃபியா துமியான் கூறுகையில், தலசீமியா நோயாளிகளுக்கு இரத்தம் செலுத்தும் முறை மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விளக்கினார்.
மேலும், பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க, திருமணம் செய்யவிருக்கும் தம்பதியினர் முன்கூட்டியே இரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்றும், முறையான ஆலோசனைகள் மூலம் புதிய தலசீமியா பிறப்புகளைத் தவிர்க்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 2:39 pm
இந்தோனேசிய அதிபரை விரைவில் சந்திக்கும் பிரதமர் அன்வார்
March 24, 2026, 2:36 pm
படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்: துர்நாற்றத்தால் வெளிச்சத்திற்கு வந்த மர்ம மரணம்
March 24, 2026, 2:35 pm
மறுசுழற்சி பொருட்களைச் சேகரித்துத் தன் பார்வையை மீட்டெடுத்த முதியவர்
March 24, 2026, 1:44 pm
தனிப்பட்ட நலன்கள் கெராக்கானை பலவீனப்படுத்தக்கூடும்: டோமினிக் லாவ்
March 24, 2026, 1:42 pm
வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
