செய்திகள் மலேசியா
வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
கோலாலம்பூர்:
தற்போது நாட்டைத் தாக்கி வரும் வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மார்ச் நடுப்பகுதிக்கும் ஏப்ரல் நடுப்பகுதிக்கும் இடையில் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப்,
குறிப்பாக தீபகற்பத்தின் வடக்கு மாநிலங்களில் வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும்.
அவரைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழையின் முடிவில் மேகமூட்டம் குறைந்து, அப்பகுதியில் சூரியன் நேரடியாக உச்சியில் இருப்பதால் வெப்ப அலைகள் ஏற்படுவது ஒரு பொதுவான நிகழ்வாகும்.
இருப்பினும், காற்றின் போக்கு பலவீனமடைவதால், இந்த வார இறுதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும்.
இது பருவமழை மாற்றக் கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அடுத்த வாரம் இது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வெப்பநிலை அதிகமாகவே இருக்கும்.
வெப்பமான இன்டோசீனா பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், மற்ற மாநிலங்களை விட வடக்குப் பகுதி அதிக வெப்பநிலையை அனுபவித்து வருவதாக மெட் மலேசிய கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 2:39 pm
இந்தோனேசிய அதிபரை விரைவில் சந்திக்கும் பிரதமர் அன்வார்
March 24, 2026, 2:37 pm
30 ஆண்டுகளாக தலசீமியா நோயுடன் போராடும் 46 ஆடவர்
March 24, 2026, 2:36 pm
படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்: துர்நாற்றத்தால் வெளிச்சத்திற்கு வந்த மர்ம மரணம்
March 24, 2026, 2:35 pm
மறுசுழற்சி பொருட்களைச் சேகரித்துத் தன் பார்வையை மீட்டெடுத்த முதியவர்
March 24, 2026, 1:44 pm
தனிப்பட்ட நலன்கள் கெராக்கானை பலவீனப்படுத்தக்கூடும்: டோமினிக் லாவ்
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
