செய்திகள் உலகம்
பெரு நாட்டில் பயங்கர சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு
அரேகிபா:
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் திங்கட்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், வேன், டிரெய்லர் லாரி மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து அரேகிபா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இடம்பெற்றது.
சுகாதார அதிகாரி வால்தர் ஒபோர்டோ கூறுகையில், சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து லிமா தலைநகரிலிருந்து 1,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிஸ் மலைப்பகுதியில் அமைந்த சான் ஆன்டோனியோ டி சுகா என்ற சிறிய நகரின் அருகே நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட லாரி பிரேசில் பதிவெண் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இருவரின் அடையாளம் மட்டுமே இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 12:14 pm
"பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை!": அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
March 24, 2026, 11:57 am
லண்டலில் பரபரப்பு: யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்புச் சம்பவம்
March 24, 2026, 11:56 am
காலம் கடந்தும் நிலைக்கும் காதல்: மனைவியின் கடைசி நிமிடம் வரை போராடிய 82 வயது கணவர்
March 24, 2026, 11:47 am
"இளைஞர்களின் உயிருடன் விளையாடாதீர்கள்": ராணுவ அதிகாரிகளைச் சாடிய அதிபர் பீட்ரோ
March 24, 2026, 10:52 am
ஒப்பந்தம் ஏற்பட்டால் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும்
March 23, 2026, 8:40 pm
பணியாத ஈரான்: வேறுவழியின்றி 48 மணி நேரக் காலக்கெடுவைக் கைவிட்டார் அதிபர் டிரம்ப்
March 23, 2026, 4:27 pm
புனித மக்கா ரமலான் சிறப்பு: 33.8 மில்லியன் மக்களுக்கு இப்தார் விருந்து
March 23, 2026, 3:58 pm
ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 3:56 pm
