நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபகற்பத்தின் 15 பகுதிகளில் வெப்பமான வானிலை நிலைகள் 1, 2ஆக பதிவாகியுள்ளன: மெட் மலேசியா

கோலாலம்பூர்:

தீபகற்பத்தின் 15 பகுதிகளில் வெப்பமான வானிலை நிலைகள் 1, 2ஆக பதிவாகியுள்ளன.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) இதனை அறிவித்துள்ளது.

கெடாவில் உள்ள படாங் டெராப்பில் வெப்பமான வானிலை நிலை 2 (வெப்ப அலை), தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.

பெர்லிஸ் முழுவதும், பாலிங், சிக், பென்டாங், போகோக் சேனா, குபாங் பாசு, புலாவ் லங்காவி, கோலா மூடா மற்றும் கெடாவில் உள்ள பந்தர் பஹாரு ஆகிய பகுதிகள் உட்பட தீபகற்ப மலேசியாவில் உள்ள 14 பகுதிகள் முதல் நிலை (எச்சரிக்கை) நிலையில் உள்ளன.

வட கிழக்கு (பினாங்கு), உலு பேரா, கோலா கங்சார் (பேரா), ஜெராண்டுட் (பகாங்), ரெம்பாவ் (நெகிரி செம்பிலான்) ஆகிய பகுதிகளுக்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாகக் குறைந்தது மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருப்பது வெப்ப அலை நிலை என்றும்,

தொடர்ச்சியாகக் குறைந்தது மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருப்பது எச்சரிக்கை நிலை என்றும் மெட் மலேசியா வரையறுக்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset