நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பநிலை உயர்வு:15 பகுதிகளில் கண்காணிப்பு நிலை அறிவிப்பு

கோலாலம்பூர்: 

மலேசிய வானிலை ஆய்வு துறை அறிவிப்பின்படி, தீபகற்ப மலேசியாவில் 15 பகுதிகள் வெப்ப நிலை எச்சரிக்கையில் உள்ளன.

இதில், கெடா மாநிலத்தின் படாங் டெராப் பகுதியில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி, இரண்டாம் நிலை வெப்பஅலை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெர்லிஸ், கெடா மாநிலத்தின் பல பகுதிகள் உள்ளிட்ட 14 இடங்கள் முதல் நிலை எச்சரிக்கை நிலையில் உள்ளன. இதேபோல், பினாங்கு, பேராக், பஹாங், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானால் அது வெப்பஅலை எனவும், 35 முதல் 37 டிகிரி வரை இருந்தால் எச்சரிக்கை நிலை எனவும் வகைப்படுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உலக வானிலை தினத்தை முன்னிட்டு, துல்லியமான வானிலை கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மனித வாழ்வையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முக்கியமானவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்பிற்காக தினமும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வானிலை ஆய்வு துறை ஊழியர்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset