செய்திகள் மலேசியா
சரவாக்கில் வெறி நாய்க்கடி நோய்க்கு 10 வயது சிறுவன் மரணம்
கூச்சிங்:
சரவாக்கில் 10 வயது சிறுவன் ஒருவன் வெறி நாய்க்கடி நோயால் உயிரிழந்ததாக மேலும் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
கூச்சிங்கைச் சேர்ந்த அந்தச் சிறுவன், கடந்த புதன்கிழமை சரவா பொது மருத்துவமனையில் உயிரிழந்தான்.
கடந்த பிப்ரவரி 11 அன்று தெருநாய் கடித்த சம்பவத்தில், அந்தச் சிறுவன் காயத்தைக் கழுவியதோடு நிறுத்திக்கொண்டு, மேலதிக சிகிச்சை பெறவில்லை என்று சரவா மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு கடந்த மார்ச் 11 அன்று பசியின்மை, வாந்தி, கழுத்துப் பிடிப்பு, நீர் பயம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கின.
பின்னர் அவர் மார்ச் 13 அன்று ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதே நாளில் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 4:22 pm
துப்பாக்கிச் சூட்டில் தொழிற்சாலை ஊழியர் காயம்; கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது: போலிஸ்
March 21, 2026, 4:21 pm
நோன்பு பெருநாள் முழுவதும் உணவு விநியோகம் போதுமானதாக இருக்கும்: மாட் சாபு
March 21, 2026, 4:17 pm
வெளிப்படையாக வாக்குவாதம் செய்வதை குவாங் எங், சோ நிறுத்த வேண்டும்: அந்தோனி லோக்
March 21, 2026, 1:48 pm
மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் வரம்பு மீற வேண்டாம்: மாமன்னர் எச்சரிக்கை
March 21, 2026, 12:21 pm
துயரத்தில் தொடங்கிய பெருநாள்: தீக்கிரையாகிய வீடுகள்
March 21, 2026, 9:30 am
"நாங்கள் யாரிடமும் பணம் கேட்கவில்லை": JSPT தலைவர்
March 21, 2026, 8:34 am
