நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளானா ஜெயா எல்ஆர்டி ரயில் சேவை செயல் திட்டத்தை அமைச்சரவையிடம் பிரசரானா சமர்ப்பித்தது: அமிர் ஹம்டான்

கோலாலம்பூர்:

கிளானா ஜெயா எல்ஆர்டி ரயில் சேவை செயல் திட்டத்தை அமைச்சரவையிடம் பிரசரானா சமர்ப்பித்தது.

பிரசரனா தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அமீர் ஹம்டான் இதனை தெரிவித்தார்.

சமீபத்திய சேவைத் தடைக்குப் பிறகு, கெலானா ஜெயா எல்ஆர்டி ரயில் சேவையை மீட்டெடுப்பதற்கான தனது செயல் திட்டத்தை பிரசரானா மலேசியா நிறுவனம் அமைச்சரவையிடம் சமர்ப்பித்துள்ளது.

சுமார் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், தொழில்நுட்ப மற்றும் வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடுகள் அடங்கியுள்ளன.

அவர்கள் எங்கள் அறிக்கையைப் பெற்றுக் கொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

எங்கள் தரப்பில், தடை ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அல்லது தடை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, செயல் திட்டம் சரியான நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இங்குள்ள பசார் செனி எம்ஆர்டி நிலையத்தின் தளத்தைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.

நிலப் பொதுப் போக்குவரத்து வாரியம் (அபாட்) நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஏதேனும் தடை ஏற்பட்டால் உடனடியாகத் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் அவர்களுக்குத் தொடர்ச்சியான அறிக்கைகளை வழங்குகிறோம்.

இதில் 24 மணி நேர, ஏழு நாள் மற்றும் 21 நாள் அறிக்கைகள் அடங்கும். அது ஒரு வழக்கமான நடைமுறை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset