நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் வரம்பு மீற வேண்டாம்: மாமன்னர் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் யாரும்  வரம்பு மீற வேண்டாம்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு எச்சரித்தார்.

தேசிய ஒற்றுமையைக் குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு கட்சிக்கும் எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்த அவர்,

மக்களின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு சக்திகளும் சமரசமின்றி வேரோடு அழிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு தாம் விடுத்த கண்டனத்தை மாமன்னர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால், அந்த எச்சரிக்கை சில கட்சிகளால் மறக்கப்பட்டுவிட்டதாகவோ அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவோ அவர் விவரித்தார்.

ஒரு கவலையும் எச்சரிக்கையும் ஏற்படும்போது சட்ட நடவடிக்கை எடுப்பது அல்லது சமூகத் தலைவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், மக்களிடையே அன்றாட நாகரிகப் பழக்கவழக்கங்களைச் செயல்படுத்துவதிலும், அது பேணி வளர்க்கப்பட வேண்டும்.

மேலும் அவ்வப்போது தொடர்ந்து நினைவூட்டப்பட வேண்டும்.

மேலும், ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்பாடுகளையும், குறிப்பாக அடக்கம், ஒழுக்கம் ஆகிய கோட்பாடுகளையும் மக்கள் மீண்டும் ஒருமுறை போற்ற வேண்டும் என்றும மாமன்னர் நினைவூட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset