நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துயரத்தில் தொடங்கிய பெருநாள்: தீக்கிரையாகிய வீடுகள்

கோத்தா பரு: 

இன்று காலை இங்குள்ள கம்பால் புனுட் பாயோஙில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இரண்டு மாடி வரிசை வீடுகள் அழிந்ததைத் தொடர்ந்து, மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு ஈகைத் திருநாள் துயரமாக மாறியது.

காலை 8.27 மணியளவில் ஏற்பட்ட தீயில் இரண்டு வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டன, மூன்றாவது வீடு 80 சதவீதம் எரிந்தது.

கிளந்தான் தீயணைப்பு, மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தச் சம்பவம் குறித்து காலை 8.27 மணிக்குத் தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.

கோத்தா பாரு, துஞ்சோங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்களும், பெங்கலான் செப்பாவிலிருந்து ஒரு டேங்கர் வாகனமும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"சம்பவ இடத்திற்கு செயல்பாட்டுக் குழு வந்தடைந்தபோது, மூன்று இரண்டு மாடி வரிசை வீடுகளில் தீ பரவியிருப்பது கண்டறியப்பட்டது.

"வரிசை வீடுகளில் இரண்டு முற்றிலும் எரிந்து நாசமாகின, மற்றொன்று 80 சதவீதம் எரிந்தது, ஆனால் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

"தீயணைப்புப் பணி தற்போது நடைபெற்று வருகிறது," என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset