நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஷவ்வால் மாத பிறை தென்பட்டதிலிருந்து வெள்ளிக்கிழமை (20.3.2026) முதல் ரமலான் பண்டிகை (21.3.2026) முடிய தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் மது கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும்: வெல்ஃபேர் கட்சி வலியுறுத்து

சென்னை:

முஸ்லிம்கள் புனிதமிகு ரமலான் மாதத்தில் ஒரு மாதம் நோன்பிருந்து தான தர்மங்களை செய்து தன் அளவிலும் சமூக அளவிலும் ஆன்மிக பயிற்சி பெற்று இறைவனுக்கு நன்றி செலுத்தும் மகிழ்வான நாளை ரமலான் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

சமூக ஒற்றுமை (Social Harmony) வளர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் சில குறிப்பிட்ட நாட்கள் இறைச்சிக் கடைகளை மூடுவதை போன்று

முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளுக்கு மரியாதை தரும் வகையிலும்.

பொது அமைதி, சமூக ஒழுங்கை வளர்க்கும் வகையிலும்.

ஷவ்வால் மாத பிறை தென்பட்டதிலிருந்து வெள்ளிக்கிழமை (20.3.2026) மாலையில் இருந்து ரமலான் பண்டிகை (21.3.2026) முடிய தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் மது கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் என்று வெல்ஃபேர் கட்சியின் துணைத் தலைவர் ம.முகமது கவுஸ் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset