நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: நடேசன்

அம்பாங் ஜெயா:

திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அறம் இயக்கத்தின் தலைவர் நடேசன் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் இனவாதத்தை தூண்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இப்போது ஆலயத்தை உடைக்கிறோம் என்று ஒரு சிலர் தொடர்ச்சியாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிம் டஹாரி என்ற ஆடவர் இந்துக்கள் புனிதமாக வணங்கி வரும் திரிசூலத்தை மிதித்துள்ளார்.

அவரின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்துக்களையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதன் அடிப்படையில் தமிம் டஹாரி மீது நாடு முழுவதும் போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

அறம் இயக்கத்தின் சார்பில் அம்பாங் ஜெயா போலிஸ் தலைமையத்தில் புகார் செய்யப்பட்டது.

இருந்தாலும் அவ்வாடவர் மீது போலிசார் இன்னும் நடவடிக்கை எடுக்காதது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

இவ்விவகாரத்தில் அரசாங்கமும் போலிசாரும் இனி அமைதியாக இருக்க முடியாது.

நாட்டில் இனவாதத்தை தூண்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நடேசன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset