நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத ரீதியான தூண்டுதல் தொடர்பான மூன்று சம்பவங்கள்; சமூக நல்லிணக்கம் குறித்த கவலைகளைத் தூண்டுகின்றன: ஏரன் அகோ

புத்ராஜெயா:

சமீபத்தில் மத உணர்வுகள், பொதுப் பாதுகாப்பு தொடர்பான மூன்று தனித்தனி சம்பவங்கள் இந்த நாட்டில் உள்ள பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும்போது கவலைகளைத் தூண்டியுள்ளன.

இனங்கள், மதங்களுக்கு இடையே பதட்டங்களைத் தூண்டக்கூடிய ஆத்திரமூட்டும் செயல்கள் மற்றும் வன்முறை கூறுகள் இதில் அடங்கும்போது, ​​தேசிய ஒற்றுமை அமைச்சு இதனை தீவிரமாகக் கருதுகிறது.

சமூக ஆர்வலர் செக்கு சந்திராவின் மூன்று வாகனங்களை பொறுப்பற்ற தரப்பினரால் எரித்தது கவனத்தை ஈர்த்த சம்பவங்களில் ஒன்றாகும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் கூறினார்.

இந்து மதத்தின் புனித சின்னமான திரிசூலை ஒரு நபர் மிதித்து சேதப்படுத்துவதைக் காட்டும் ஒரு வீடியோவும் வைரலாகியது.  இது மதத்தைப் பின்பற்றுபவர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது.

 ஜம்ரி வினோத் மீதான தாக்குதலால் நிலைமை மேலும் மோசமடைந்தது. இது தனிநபர் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு குறித்த கவலைகளையும் தூண்டியது என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் நடந்த மூன்று சம்பவங்களை தேசிய ஒற்றுமை அமைச்சகம் மிகவும் தீவிரமாகவும் உறுதியாகவும் கருதுகிறது.

அவை இந்த நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

மலேசியா போன்ற பல இன, பல மதங்களைக் கொண்ட நாட்டில், இன, மத உணர்வுகளைத் தொடும் எந்தவொரு வன்முறை, மதத் தூண்டுதல், வெறுப்பு அல்லது தீவிரமான செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset