நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தூதரகத்திலிருந்து தப்பிய ஓடிய வெளிநாட்டு பெண் ஏரியில் சடலமாக கண்டெடுப்பு

கோலாலம்பூர்: 

செராஸ் பகுதியில் உள்ள ஏரியில் குதித்த வெளிநாட்டு பெண் ஒருவர் மூழ்கி உயிரிழந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார். அவர் தூதரக அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது இந்த சம்பவம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹமத் முக்லிஸ் முக்தார் தெரிவித்ததாவது:

இந்த சம்பவம் தொடர்பாக மாலை 4.35 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பண்டார் துன் ஹுசைன் ஒன் தீயணைப்பு நிலையத்திலிருந்து குழு 4.39 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தது.

முப்பது வயதிற்கு அருகிலுள்ள இந்தோனேசிய பெண் ஒருவர், தூதரக அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது ஏரியில் குதித்ததாக நம்பப்படுகிறது.

முதலில் நீர்மேல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் நீர்மூழ்கி மீட்புக் குழு இரவு 10.10 மணிக்கு நீரில் மூழ்கிச் தேடுதல் மேற்கொண்டது.

ஒன்பது நிமிடங்களில், ஏரிக்கரையிலிருந்து சுமார் ஆறு மீட்டர் தொலைவில், மூன்று மீட்டர் ஆழத்தில் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட அவரை சுகாதார அதிகாரிகள் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது. பின்னர் மேலதிக விசாரணைக்காக அவரது உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset