நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது

ஜொகூர் பாரு: 

நேற்று காலை ப்ளென்டோங், மாசாய் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், குப்பைத்தொட்டிக்குள் புதிதாகப் பிறந்ததாக நம்பப்படும் ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

நேற்று காலை 8.45 மணியளவில் அந்தக் குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததாக ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முஹம்மத் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

“அந்தக் குழந்தை உடை இன்றி பிளாஸ்டிக் பையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அந்தக் குழந்தை முழுமையான உடல் அமைப்புடன் உயிருடன் இருந்தது என்று சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் (HSI) மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

“இந்தச் சம்பவம் தொடர்பாக, குழந்தையைத் திட்டமிட்டு கைவிடும் நோக்கில் விட்டு சென்றதாகக் கருதி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 317 கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“இந்த வழக்குடன் தொடர்புடைய ஏதேனும் தகவல்கள் இருந்தால், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூர் ஹனிஸ் முஹம்மத் நஃபிபியை 018-7718919 என்ற எண்ணில் அல்லது ஸ்ரீ ஆலாம் மாவட்ட காவல் தலைமையக ஹாட்லைன் 07-3864222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset