செய்திகள் உலகம்
ஈரானின் அதிரடி தாக்குதல்: இஸ்ரேலில் 9 பேர் உயிரிழந்தனர்
பெயித் ஷெமேஷ்:
மத்திய இஸ்ரேல் ஆளுகைப் பகுதியில் உள்ள பெயித் ஷெமேஷ் நகரில், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் தனது உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்துக்குப் பின்னர் மேற்கொண்ட பதிலடி தாக்குதலின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
காயமடைந்தவர்களில் இருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவசர சேவை அமைப்பான 'Magen David Adom' (MDA) அறிக்கை வெளியிட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்பதற்காக தேடுதல், மீட்பு படைகள், மருத்துவ ஹெலிகாப்டர்களுடன் பெயித் ஷெமேஷில் செயல்பட்டு வருகின்றன என இஸ்ரேலிய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு முன் எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உட்பட ஏவுகணை தாக்கத்தின் உண்மையான நிலையைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை பதிவான உயிரிழப்புகள், கடந்த சனிக்கிழமை தொடங்கிய தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலில் பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும் என மேற்கு கரையோரத்தின் ரமல்லாவில் இருந்து 'Al Jazeera' செய்தியாளர் குறிப்பிட்டார்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
மேலும், தாக்குதல் நேரத்தில் பெயித் ஷெமேஷில் முன்எச்சரிக்கை அமைப்பு செயல்படுத்தப்படாததைக் குறித்து உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 2, 2026, 10:26 pm
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் அறிவிப்பு
March 2, 2026, 10:26 pm
குவைத் தவறுதலாக மூன்று அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது
March 2, 2026, 2:50 pm
"ஈரான் போர் குறைந்தது 4 வாரங்கள் நீடிக்கும்": அமெரிக்க அதிபர் டிரம்ப் கணிப்பு
March 1, 2026, 7:49 pm
ஈரானின் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்?
March 1, 2026, 5:05 pm
அயத்துல்லா அலி கமெனி மரணத்திற்கு கண்ணீர் வடிக்கும் மக்கள்
March 1, 2026, 11:03 am
கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
March 1, 2026, 1:29 am
