நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அவதூறுச் செய்திக்கு இழப்பீடு கோர நீதிமன்றத்திற்குச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர்கள் கா சண்முகம், டான் சீ லெங்

சிங்கப்பூர்:

இணையத்தில் வெளிவந்த அவதூறுச் செய்திக்கு இழப்பீடு கோர உள்துறை அமைச்சர் கா சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் இன்று நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். 

The Online Citizen என்ற இணையப்பக்கத்தில் செய்தி வெளியானது. செய்தித்தளத்தின் முதன்மை ஆசிரியர் டெரி ஷுவுக்கு (Terry Xu) எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் அவதூறு பரப்பியதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தீர்ப்பு விதிக்கப்பட்டது. 

தற்போது தைவானில் வசிக்கும் ஷு இன்று நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. 

Bloomberg செய்தித்தளத்தில் வெளிவந்த தகவல்களைத் தழுவி The Online Citizen இணையத்தளத்தில் செய்தி வெளியானது. உயர்தர பங்களா (Good Class Bungalow) பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அமைச்சர் கா சண்முகம் தமது உயர்தர பங்களாவை விற்றது குறித்தும் அமைச்சர் டான் ஒரு பங்களாவை வாங்கியது குறித்தும் செய்தியில் விவரிக்கப்பட்டிருந்தது. ஷு அந்தப் பத்திகளை நீக்க மறுத்துவிட்டார். அமைச்சர்கள் எவ்வளவு இழப்பீடு கோரினர் என்ற தகவல் வெளிவரவில்லை. வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. விவகாரம் தொடர்பில் Bloomberg நிறுவனம் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த விசாரணை ஏப்ரலில் நடைபெறும்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset