நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சில நாடுகளுக்கு அமெரிக்காவின் சுங்க வரி 15 சதவீதம் வரை உயர வாய்ப்பு

வாஷிங்டன்: 

அமெரிக்கா (AS) சில நாடுகளுக்கு விதிக்கும் சுங்க வரி விகிதம், சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் அல்லது அதற்கு மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சம்பந்தப்பட்ட நாடுகளின் பெயர்கள் தற்போது வெளியிடப்படாது என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) பிரதிநிதியான ஜேமிசன் கிரீர் தெரிவித்தார்.

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகளைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் வர்த்தக கொள்கையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கிரீர் கூறினார்.

இந்த உயர்வு, 1974ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன் அதிபரின் அதிகாரத்தை மீறியதாகக் கருதி நடைமுறையில் இருந்த சுங்க வரி திட்டத்தை  அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 பொதுவான சுங்க வரி ஒரு குறிப்பிட்ட அளவில் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், முன்பே செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின் அடிப்படையில் சில நாடுகளுக்கு அதிக வரி விகிதம் தொடரலாம் என்றார் அவர்.

உதாரணமாக, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து வரும் ஏற்றுமதிகளுக்கு, பொதுவான சுங்க வரி குறைவாக இருந்தாலும், ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் படி 19 சதவீத வரி தொடரலாம் என அவர் விளக்கினார்.

அமெரிக்க காங்கிரஸின் கூடுதல் அனுமதி இல்லையெனில், பிரிவு 122-ன் கீழ் விதிக்கப்படும் சுங்க வரிகள் 150 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். ஆதலால், இந்தப் புதிய நடவடிக்கை, உலக சந்தைகளில் நிலைத் தடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
 
வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கவும் அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் சுங்க வரிகள் முக்கியமானதாகும் என டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset