நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கியூபா கரையோரத்தில் துப்பாக்கிச் சூடு: அமெரிக்க படகில் நால்வர் பலி

வாஷிங்டன்: 

கியூபா கரையோர காவல்படை, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேக படகை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அமெரிக்கா–கியூபா இடையிலான உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட அந்தப் படகில் பயணித்தவர்கள், அமெரிக்க தடைகளுக்குள் இருக்கும் கியூபா தீவை ஏன் அணுகினர் என்பதைக் ஹவானா இதுவரை வெளியிடவில்லை.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை வாஷிங்டன் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், முழு தகவல்கள் கிடைத்த பிறகு உரிய பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

கியூபாவிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புளோரிடா மாநிலத்தின் சட்டத்துறைத் தலைவர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்தப் படகின் பின்னணி குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

முன்னதாகவும், அமெரிக்காவிலிருந்து கியூபா கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழையும் அதிவேக படகுகள் குறித்து கியூபா அரசு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset