செய்திகள் உலகம்
அளவுக்கு மீறிய பயணிகள் ஏற்றம்: பேருந்து அனுமதி இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
ஹனோய்:
துயென் குவாங்–பாக் நின் வழித்தடத்தில் இயங்கிய நீண்ட தூர பேருந்து ஒன்று, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றதாக கண்டறியப்பட்டுள்ளது. 45 இருக்கைகள் மட்டுமே உள்ள அந்த பேருந்தில் 83 பயணிகள் பயணித்தனர்.
நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண்–1 அதிகாரிகள், சமூக ஊடக செயலி மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், நொய் பாய்–லாவ் காய் நெடுஞ்சாலையில் அந்த பேருந்தை நிறுத்தினர்.
வியட்நாம்நெட் தகவலின்படி, போக்குவரத்து காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனையில், பேருந்து ஓட்டுநருக்கும், வாகன உரிமையாளருக்கும் சேர்த்து 207 மில்லியன் வியட்நாம் டொங் (சுமார் RM31,100) அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அதிகமான பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்ய காவல்துறை உத்தரவிட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:06 pm
ஹோர்முஸ் ஜலசந்தியில் சீன, ஈரானியக் கப்பல்களின் மர்மப் பயணம்
April 13, 2026, 3:04 pm
வங்காளதேசத்தில் பரபரப்பு: மத விவகாரத்தில் ஆன்மிகத் தலைவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்
April 13, 2026, 10:40 am
உலகின் மிக உயரமான 'பாழ்' கட்டிடத்திற்கு விடிவுகாலம்
April 12, 2026, 6:08 pm
