நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன மீன்பிடி படகு பறிமுதல்: ஜப்பான் நடவடிக்கைக்கு சீனா கடும் அதிர்ச்சி

டோக்கியோ: 

ஜப்பான் அதிகாரிகள் இன்று ஒரு சீன மீன்பிடி படகை பறிமுதல் செய்து, அதன் கேப்டனை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம், ஜப்பான், சீனா நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

கடந்த நவம்பரில், சனே தகைச்சி, சீனா வலுக்கட்டாயமாக தைவானை கைப்பற்ற முயன்றால், ஜப்பான் இராணுவ ரீதியில் தலையிடலாம் எனக் கூறியிருந்தார். அந்த அறிக்கை, பெய்ஜிங் நிர்வாகத்தின் கடும் எதிர்ப்பை தூண்டியது.

இதற்கிடையில், ஜப்பான் மீன்வள முகமை வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட படகின் கேப்டனுக்கு மீன்வள அதிகாரிகள் ஆய்வுக்காக நிற்குமாறு உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. 

ஆனால், அந்த படகு உத்தரவை பின்பற்றாமல் தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதனைத் தொடர்ந்து, அதே நாளில் படகின் கேப்டன் கைது செய்யப்பட்டார்,” என அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset