நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான சர்ச்சைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சர்ச்சைக்குரிய ஆலயங்களுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

இன்று கட்டப்படவிருக்கும் ஆலயத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள் நடைபெறுகிறது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நல்லது அல்ல. இது அமைதியை சீர்குலைக்கும்.

ஆகவே ஆலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களின் சர்ச்சைகளை கண்காணிக்கவும் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கவும் சிறப்பு குழு உடனடியாக அமைக்க வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset