நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டில் புகுந்து பெண்ணின் நகையைக் கொள்ளையடித்த நபர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

கோத்தா பாரு:

மச்சாங் பகுதியில் கடந்த ஜனவரி 20 அன்று நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, 35 வயதுடைய தொழிலாளி ஒருவர் இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அஹ்மத் நஸ்மி அஹ்மத் இஸ்மாயில் என்பவர், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நிக் ஹப்ரி முகமது முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கம்போங் கெலோங் கஜா பகுதியில் உள்ள வீட்டில் காலை 7.15 மணியளவில், 58 வயதுடைய ஹஃபிசா மத் அலியை அவர் தாக்கி, இரண்டு தங்க வளையல்கள், ஒரு சங்கிலி, இரண்டு லாக்கெட்டுகளை கொள்ளையடித்ததாக கூறப்பட்டது.

இந்த வழக்கு குற்றச் சட்டம் பிரிவு 394-இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

வழக்கு விவரங்களின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையை பிடித்து, முகத்தை மூடிய பின்னர், அவரை தரையில் அமரச் செய்து, கையை மிதித்து தங்க நகைகளைப் பறித்தார். தப்பிச் செல்லும் முன், அவரது வாயை மூடி, கை, கால்களை கட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

மாலை 1.35 மணிக்கு போலீஸார் குற்றவாளியை கைது செய்தனர். வழக்கில் அரசு தரப்பில் துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நூர் சியாஃபிகா முஹம்மது, ஆஜராகினார்; குற்றவாளிக்கு வழக்கறிஞர் இல்லை.

நீதிமன்றம் மார்ச் 11-ஆம் தேதியை தண்டனை அறிவிப்புக்கான நாளாக நிர்ணயித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset