செய்திகள் மலேசியா
மூன்று வீடுகளில் புகுந்து தாக்கிய வேலை இல்லாத நபர் கைது
முவார்:
வேலை இல்லாத 29 வயது இளைஞர் ஒருவர், கோலாலம்பூரிலிருந்து பகோ பகுதிக்கு காரில் சென்று, தாமன் பகோ ஜெயா குடியிருப்புப் பகுதியில் மூன்று வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதற்காக ஞாயிற்றுக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
முவார் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் கூறுகையில், சந்தேகநபர் மாலை 5 மணியளவில் தனியாக வந்து வீடுகளின் வேலிகளையும் சுவர்களையும் ஏறி, ஒரு வீட்டின் இரும்புக் கதவின் கைப்பிடியையும் உடைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், வீட்டின் உரிமையாளர் ஒருவரை தாக்கி முகப்பகுதியில் காயம் ஏற்படுத்தியதாக கூறினார். சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் உள்ள மூன்று வீடுகள் குறித்து போலீஸார் புகார்கள் பெற்றனர்.
பொதுமக்களின் தகவலின் அடிப்படையில், பஞ்சோர், பகோ காவல் நிலைய குற்றத் தடுப்பு ரோந்து குழுக்கள் சம்பவ இடத்திலேயே அவரை கைது செய்தன. அவருக்கு முன்பே ஒரு குற்றப் பதிவு இருப்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 448, 323, 447, 427 இன் கீழ் விசாரிக்கப்பட்டு, சந்தேகநபர் நான்கு நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 9, 2026, 6:19 pm
பொன்தியானில் பள்ளி மாணவருக்கு காசநோய் தொற்று
February 9, 2026, 6:16 pm
சீன புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து வசதி: பிளஸ் 32 ஸ்மார்ட் லேன்களை இயக்கவுள்ளது
February 9, 2026, 5:39 pm
அடிதடியில் ஈடுபட்ட 8 தொழிற்கல்லூரி மாணவர்கள் கைது
February 9, 2026, 5:12 pm
ஆவணமற்ற இந்து ஆலயங்கள் பிரச்சினையை அரசு முதலில் தீர்க்க வேண்டும்: டத்தோ லோகபாலா
February 9, 2026, 5:08 pm
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும்: யுனேஸ்வரன்
February 9, 2026, 4:17 pm
போதைப்பொருள், குற்ற வழக்குகள் தொடர்புடைய 10 பேர் காப்பிக்கடை சண்டையில் பிடிபட்டனர்
February 9, 2026, 3:34 pm
ஸ்பைடர்மேன் உடை அணிந்து குழந்தையை பிச்சை எடுக்க பயன்படுத்திய ஆடவர் கைது
February 9, 2026, 3:31 pm
