நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள், குற்ற வழக்குகள் தொடர்புடைய 10 பேர் காப்பிக்கடை சண்டையில் பிடிபட்டனர்

கோலாலம்பூர்:

தாமான் பெரிங்கினில் அமைந்துள்ள காப்பிக்கடை - 'cafe' பெரிங்கினில் இரண்டு குழுக்களுக்கிடையே நடந்த மோதலில் கைது செய்யப்பட்ட 10 ஆண்களுக்கு பல்வேறு குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கலவரச் சம்பவம் தொடர்பாக 28 முதல் 41 வயதுக்குட்பட்ட 10 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களின் மேல் குற்றச்செயல்கள், போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் அல்லது இரண்டும் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

“இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் பிரிவு 148ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

“சந்தேகநபர்களுக்கு ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை தடுப்பு காவல் பெறப்பட்டுள்ளது. வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset