நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்பைடர்மேன் உடை அணிந்து குழந்தையை பிச்சை எடுக்க பயன்படுத்திய ஆடவர் கைது

மலாக்கா:

50 வயதுடைய ஒரு ஆண், தனது உறவினரான 7 வயது சிறுமியை ஸ்பைடர்மேன் உடையை அணிந்து பகலில் பொதுமக்களிடம் பிச்சை எடுக்க வைத்துள்ளார். அவர் தனது வாழ்வாதாரத்தைச் சமாளிக்க இந்த நடவடிக்கை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் செயல்பாடு மலாக்கா மாநில பெண்கள், குடும்ப சமூக கவுன்சில் டத்தோ கல்சோம் நூர்டின், மலாக்கா சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் நேற்று மாலை 6 மணியளவில் வெளிப்படுத்தப்பட்டது. குற்றவாளி குழந்தையின் தந்தை அல்ல, அவருடைய மாமா மட்டுமே என்று தெரியவந்தது.

பாதுகாப்பு பணியாளராக இருந்த வேலை விலகியதால், அவர் குழந்தையை அவ்வாறு பயன்படுத்தியதாக கால்சோம் கூறினார்.

மேலும் குற்றவாளி தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு, அதனால் வருந்தியதாகவும், குழந்தையின் பெற்றோர்கள் இதனை அறிந்திருந்ததாகவும் தெரிவித்தார். 
இந்தச் செயல் 2001 குழந்தைகள் சட்டம், பிரிவு 32 கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset