செய்திகள் மலேசியா
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும்: யுனேஸ்வரன்
புத்ரா ஜெயா:
அனுமதியின்றி கட்டப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்ப்பதில் மடானி அரசு நியாயமாகவும் சமநிலையான அணுகுமுறையையும் பின்பற்றுகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணைய்மைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவதற்காக சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தல நிர்வாகங்களுக்குக் கால அவகாசம் வழங்கி, நுணுக்கமாக இந்த விவகாரத்தை அரசு கையாள்கிறது.
அதே நேரத்தில், உடனடி நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயல்வோரைக் கட்டுப்படுத்த அரசு உறுதியாகச் செயல்படும்.
நிலம் தொடர்பான விவகாரங்களில் குறிப்பாகப், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், கோயில்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஒரே சட்டத்திற்கும் ஒரே வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டவை என்பது அடிப்படை கோட்பாடு என அவர் வலியுறுத்தினார்.
இப் பிரச்சனைகளுக்கு மோதலின் மூலம் அல்ல; மாறாகக், கலந்துரையாடல் மற்றும் உரிய நடைமுறைகள் வழியாகவே தீர்வு காணப்பட வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மலேசியா புரிதல், மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் செயல்படும் நாடு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யுனேஸ்வரன் கூறினார்.
நீதி, இன ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில், நாட்டின் நலனுக்காகத் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை முழுத் திறனுடன் நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நாட்டில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைக்கு உதவத் தயார் என வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறிய கூற்றைத் தாம் வரவேற்பதாகவும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.
கூடிய விரைவில் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை இந்தச் சிக்கலுக்கு நிரந்த தீர்வைக் காணும் என்ற எதிர்ப்பார்ப்பு தமக்கு இருப்பதாகவும் யுனேஸ்வரன் கூறினார்.
இனி வரும் காலங்களில் உரிய நிலம், முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதி கிடைத்த பின்னரே வழிப்பாட்டுத் தலங்களை நிறுவ முடியும் என்பதை அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 9, 2026, 6:19 pm
பொன்தியானில் பள்ளி மாணவருக்கு காசநோய் தொற்று
February 9, 2026, 6:16 pm
சீன புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து வசதி: பிளஸ் 32 ஸ்மார்ட் லேன்களை இயக்கவுள்ளது
February 9, 2026, 5:42 pm
மூன்று வீடுகளில் புகுந்து தாக்கிய வேலை இல்லாத நபர் கைது
February 9, 2026, 5:39 pm
அடிதடியில் ஈடுபட்ட 8 தொழிற்கல்லூரி மாணவர்கள் கைது
February 9, 2026, 5:12 pm
ஆவணமற்ற இந்து ஆலயங்கள் பிரச்சினையை அரசு முதலில் தீர்க்க வேண்டும்: டத்தோ லோகபாலா
February 9, 2026, 4:17 pm
போதைப்பொருள், குற்ற வழக்குகள் தொடர்புடைய 10 பேர் காப்பிக்கடை சண்டையில் பிடிபட்டனர்
February 9, 2026, 3:34 pm
ஸ்பைடர்மேன் உடை அணிந்து குழந்தையை பிச்சை எடுக்க பயன்படுத்திய ஆடவர் கைது
February 9, 2026, 3:31 pm
