நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூர் சுங்கச் சாவடியில் எதிர்திசையில் காரை ஓட்டிய சிங்கப்பூர் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு:

சிங்கப்பூரில் பதிவுபெற்ற கார் ஒன்று ஜொகூர் பாரு சுங்கச் சாவடியில் எதிர்திசையில் காரை ஓட்டியதாக வாகனமோட்டி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆடவர் ஓட்டி வந்த காரை நிறுத்தக் காவல்துறை அதிகாரிகள் செய்த முயற்சியையும் வாகனமோட்டி பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிரது.

காரை பலமுறை முன்னுக்கும் பின்னுக்குமாக அவர் ஓட்டினார். காவல்துறையின் எச்சரிக்கையைப் புறக்கணித்தார்.

பிறகு காரின் வேகத்தைக் கூட்டி அவர் அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சம்பவத்தின் காணொலி SG Road Vigilante Facebook பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த ஜனவரி 26ஆம் தேதி நடந்ததாக அதிலுள்ள தகவல்கள் காட்டுகின்றன.

ஆபத்தான முறையில் காரோட்டிய வாகனமோட்டியை இணையவாசிகள் பலர் கண்டித்துள்ளனர்.

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆதாரம்: 8World 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset