செய்திகள் மலேசியா
தமிழ்மொழி இந்தியாவை உலகுடன் இணைக்கிறது: மோடி
செர்டாங்:
தமிழ்மொழிதான் இந்தியாவை உலகுடன் இணைக்கிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர் மோடி கூறினார்.
கோலாலம்பூரில் மோடி பேசுகையில், மலேசியாதான் இரண்டாவதாக அதிக இந்திய வம்சாவளிகளைக் கொண்ட நாடாக உள்ளது.
இந்தியா - மலேசியாவை இணைப்பதில் பலவும் பங்களிக்கின்றன. அவற்றில் கலாசாரம்தான் எங்களை இணைக்கும் உயிருள்ள பாலம்.
தமிழ்தான், இந்தியாவை உலகுடன் இணைக்கிறது. தமிழ் இலக்கியம் முடிவற்றது; தமிழ்க் கலாசாரம் உலகளாவிய ஒன்று.
இந்திய திரைப்படங்களும் இசையும் மலேசியாவில் பிரபலமாக இருப்பதாக அறிகிறேன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு பழைய ஹிந்தி பாடலை பாடிய வீடியோக்களும் வைரலாகின.
புகழ்பெற்ற எம்ஜிஆரின் தமிழ்ப் பாடல்களையும் அவர் விரும்புவது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மலேசியா செல்வதைத் தொடர்ந்து வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2026, 11:23 pm
இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு இதயப்பூர்வமானது: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம்
February 7, 2026, 5:38 pm
சுங்கை டுவா குடியிருப்பில் பெண் கொலை விவகாரம்: பொறாமை காரணமா? போலீஸ் விசாரணை தீவிரம்
February 7, 2026, 3:00 pm
புதிய ஆடைப் பொதியில் RM2.4 மில்லியன் நாணயக் கடத்தல் முயற்சி முறியடிப்பு
February 7, 2026, 2:17 pm
மலேசிய இந்து ஆலய, இயக்கங்களின் மாநாடு; பத்துமலையில் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
February 7, 2026, 1:12 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு 50% சுங்கக் கட்டண தள்ளுபடி
February 7, 2026, 12:39 pm
தங்கம், பணம் அடங்கிய பாதுகாப்புப் பெட்டியை தூக்கிய வழக்கு: வெளிநாட்டு பெண் உட்பட ஆறு பேர் கைது
February 6, 2026, 9:01 pm
சட்டத்தை மீறுவதற்காக ஆலயங்கள் கட்டப்படவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காட்டம்
February 6, 2026, 8:52 pm
