நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜம்ரி வினோத் கைது: கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில்

கோலாலம்பூர்:

சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் எதிர்ப்பு  பேரணியின் ஒருங்கிணைப்பாளர் ஜம்ரி வினோத், சோகோவைச் சுற்றியுள்ள பல நபர்களை கைது செய்ததை போலிசார் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜம்ரி கைது செய்யப்பட்டதை கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் உறுதி செய்தார்.

நேற்று இரவு 8 மணிக்கு நடைபெறவிருந்த பேரணி தொடர்பாக போலிசாரால் கைது செய்யப்பட்ட பேரணி தொடர்புடைய பல நபர்களில் ஜம்ரியும் ஒருவர் என்று ஃபாடில் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.

ஜம்ரி வினோத் மற்றும் பிற ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை நான் உறுதிப்படுத்துகிறேன். 

கைது தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று வழங்குவோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset