நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

21 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் செமினி தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் கிடைத்தது: அருட்செல்வன்

செமினி:

21 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் செமினி தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் கிடைத்துள்ளது.

பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் இதனை கூறினார்.

கிட்டத்தட்ட 21ஆண்டுகளுக்கு முன் செமினி தோட்ட மக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் அவர்கள் தோட்ட வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினர்.

அதேவேளையில் 17 குடும்பங்கள் சைம் டார்பி நிறுவனம் சொந்த வீடுகளை கட்டித் தர வேண்டும் என இறுதி வரை போராடியது.

இதன் அடிப்படையில் 17 குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் இலவசமாக வீடுகளை கட்டித் தந்தது.

மேலும் தோட்டத்தை விட்டு வெளியேறிய 17 குடும்பங்களுக்கு 42,000 ரிங்கிட் விலையில் வீடுகளை விற்பனை செய்யப்பட்டது.
பல இடர்களுக்கு பின் அந்த வீடுகள் அனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

இன்று அந்த வீடுகளின் சாவி 34 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இது பிஎஸ்எம் கட்சியும் முன்னாள் செமினி தோட்ட மக்களும் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

குறிப்பாக சைம் டார்பி நிறுவனம் தோட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தந்ததும் இதுவே முதல் முறையாகும்.

இது எப்படி இருந்தாலும் செமினி தோட்ட மக்களுக்கு அனைவருக்கும்  இன்று சொந்த வீடுகள் கிடைத்துள்ளது.

இதுவே நமது வெற்றியாகும். போராடினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்று அருட்செல்வன் கூறினார்.

முன்னதாக எங்களுக்கு வீடுகள் கிடைக்க உதவிய சிலாங்கூர் மாநில அரசு, பிஎஸ்எம் கட்சி, அருட்செல்வன் உட்பட அனைவருக்கும் எங்களின் நன்றி என்று தோட்ட மக்கள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset