செய்திகள் மலேசியா
பேராக் ம இ கா கல்வி நிதியுதவியாக 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது: டான்ஸ்ரீ இராமசாமி
ஈப்போ:
பேராக் மாநில ம இ கா கல்வியின் முக்கியதுவத்தை அறிந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 லட்சம் ரிங்கிட்டை உயர்கல்வி மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருவதாக நிதியுதவி வழங்கும் நிகழ்வில் பேராக் ம இ கா தலைவரும், ம இ கா வின் தேசிய உதவித்தலைவருமாகிய டான்ஸ்ரீ எம். இராமசாமி கூறினார்.
இம்மாதம் 7 மாணவர்களுக்கு சுமார் 2 இலட்சம் ரிங்கிட் கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டது. இந்திய மாணவர்களை தவிர்த்து பிற இன மாணவர்களுக்கும் ம இ கா பாகுபாடின்றி உதவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதுடன், திவெட் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ம இ கா வால் உருவான " டேப்" கல்லூரியில் இதுவரை சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் படித்து நன்மை அடைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ம இ கா எந்த வேறுபாடும் இல்லாமல் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் "டேப்" கல்லூரியில் பயிலும் மாணவர்களை தவிர்த்து மற்ற உயர்கல்வி கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவி வருவதாக அவர் சொன்னார்.
ம இ கா என்பது இந்திய சமூகத்தின் கட்சியாகும். ஆகையால், இந்நாட்டு இந்தியர்களின் தேவைகள் மற்றும் அவசியத்தை உணர்ந்து உதவி வருகிறது. குறிப்பாக, கல்வியின் அவசியத்தை உணர்ந்து நம் மாணவர்களுக்கு உதவி வருவதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
December 5, 2025, 8:56 am
புங் மொக்தார் காலமானார்
December 4, 2025, 12:18 pm
திருவள்ளுவர் சிலை விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையாக்க வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
December 3, 2025, 9:29 am
சம்சுல் ஹாரிஸ் மரணத்திற்கு காரணமான நபரை போலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்: டத்தோ குமார்
December 2, 2025, 1:09 pm
பத்துமலை திருத்தலத்திற்கு அஜித்குமார் வருகை
December 2, 2025, 11:36 am
காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளை நிரப்ப பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன
December 1, 2025, 6:09 pm
