செய்திகள் மலேசியா
பேராக் ம இ கா கல்வி நிதியுதவியாக 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது: டான்ஸ்ரீ இராமசாமி
ஈப்போ:
பேராக் மாநில ம இ கா கல்வியின் முக்கியதுவத்தை அறிந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 லட்சம் ரிங்கிட்டை உயர்கல்வி மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருவதாக நிதியுதவி வழங்கும் நிகழ்வில் பேராக் ம இ கா தலைவரும், ம இ கா வின் தேசிய உதவித்தலைவருமாகிய டான்ஸ்ரீ எம். இராமசாமி கூறினார்.
இம்மாதம் 7 மாணவர்களுக்கு சுமார் 2 இலட்சம் ரிங்கிட் கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டது. இந்திய மாணவர்களை தவிர்த்து பிற இன மாணவர்களுக்கும் ம இ கா பாகுபாடின்றி உதவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதுடன், திவெட் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ம இ கா வால் உருவான " டேப்" கல்லூரியில் இதுவரை சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் படித்து நன்மை அடைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ம இ கா எந்த வேறுபாடும் இல்லாமல் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் "டேப்" கல்லூரியில் பயிலும் மாணவர்களை தவிர்த்து மற்ற உயர்கல்வி கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவி வருவதாக அவர் சொன்னார்.
ம இ கா என்பது இந்திய சமூகத்தின் கட்சியாகும். ஆகையால், இந்நாட்டு இந்தியர்களின் தேவைகள் மற்றும் அவசியத்தை உணர்ந்து உதவி வருகிறது. குறிப்பாக, கல்வியின் அவசியத்தை உணர்ந்து நம் மாணவர்களுக்கு உதவி வருவதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: டத்தோ மனோகரன்
January 14, 2026, 3:35 pm
