செய்திகள் மலேசியா
பேராக் ம இ கா கல்வி நிதியுதவியாக 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது: டான்ஸ்ரீ இராமசாமி
ஈப்போ:
பேராக் மாநில ம இ கா கல்வியின் முக்கியதுவத்தை அறிந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 லட்சம் ரிங்கிட்டை உயர்கல்வி மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருவதாக நிதியுதவி வழங்கும் நிகழ்வில் பேராக் ம இ கா தலைவரும், ம இ கா வின் தேசிய உதவித்தலைவருமாகிய டான்ஸ்ரீ எம். இராமசாமி கூறினார்.
இம்மாதம் 7 மாணவர்களுக்கு சுமார் 2 இலட்சம் ரிங்கிட் கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டது. இந்திய மாணவர்களை தவிர்த்து பிற இன மாணவர்களுக்கும் ம இ கா பாகுபாடின்றி உதவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதுடன், திவெட் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ம இ கா வால் உருவான " டேப்" கல்லூரியில் இதுவரை சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் படித்து நன்மை அடைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ம இ கா எந்த வேறுபாடும் இல்லாமல் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் "டேப்" கல்லூரியில் பயிலும் மாணவர்களை தவிர்த்து மற்ற உயர்கல்வி கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவி வருவதாக அவர் சொன்னார்.
ம இ கா என்பது இந்திய சமூகத்தின் கட்சியாகும். ஆகையால், இந்நாட்டு இந்தியர்களின் தேவைகள் மற்றும் அவசியத்தை உணர்ந்து உதவி வருகிறது. குறிப்பாக, கல்வியின் அவசியத்தை உணர்ந்து நம் மாணவர்களுக்கு உதவி வருவதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
March 2, 2026, 10:27 pm
எகிப்து, ஜோர்டானில் உள்ள 540 மாணவர்களின் நிலையை ஜொகூர் அரசு கண்காணித்து வருகிறது
March 2, 2026, 10:25 pm
பூடி95 பெட்ரோல் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 14.8 மில்லியன் பேர் பயனடைந்துள்ளனர்: அமீர் ஹம்சா
March 2, 2026, 10:24 pm
பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தோல்வி: இரண்டு வாக்குகள் தவறிவிட்டன
March 2, 2026, 10:23 pm
செந்தோசாவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது: குணராஜ்
March 2, 2026, 10:22 pm
இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
March 2, 2026, 5:39 pm
6 வயது மகளுக்கு பாலியல் கொடுமை: பாதுகாப்பு காவலர் 13 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்
March 2, 2026, 5:38 pm
சபாக் பெர்னாமில் சட்டவிரோத குடியேறிகள்: உள்நாட்டு ஆடவர் கைது
March 2, 2026, 3:30 pm
AKPS கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு வழக்கு: ஐந்து சாட்சிகள் வாக்குமூலம் வழங்கினர்
March 2, 2026, 3:29 pm
தடை செய்யப்பட்ட பொருள் கடத்தலுக்கு லஞ்சம்: அரசு ஊழியர்கள் கைது
March 2, 2026, 2:53 pm
