செய்திகள் மலேசியா
AKPS கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு வழக்கு: ஐந்து சாட்சிகள் வாக்குமூலம் வழங்கினர்
கோலாலம்பூர்:
கடந்த புதன்கிழமை புக்கிட் காயு ஹித்தாம் எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை (AKPS) கமாண்டர் ஓட்டி சென்ற புரோட்டான் X70 காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ இதுவரை ஐந்து சாட்சிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் இந்த வழக்குடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கெடா மாநில காவல்துறை தலைவர், டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.
“மேலும், சந்தேக நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் புதிய சந்தேக நபர்கள் உள்ளார்களா என்பதையும் போலிசார் அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாகத் தாய்லாந்து பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேக நபர்களைப் போலிசார் கைது செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அவர்கள் கெடா மாநில காவல் துறையின் குற்றப் புலனாய்வின் (JSJ) சிறப்பு விசாரணைப் பிரிவு (D9) நடத்திய ‘Ops Tutup’ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக அட்ஸ்லி கூறினார்.
கணவன்-மனைவி இருவரும் தப்பிச் சென்று அண்டை நாட்டுக்குள் நுழைய முயன்றபோது பெர்லிஸ் மாநிலம் பாடாங் பெசார் எல்லைச் சோதனைப் பகுதியில் மதியம் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 2, 2026, 10:27 pm
எகிப்து, ஜோர்டானில் உள்ள 540 மாணவர்களின் நிலையை ஜொகூர் அரசு கண்காணித்து வருகிறது
March 2, 2026, 10:25 pm
பூடி95 பெட்ரோல் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 14.8 மில்லியன் பேர் பயனடைந்துள்ளனர்: அமீர் ஹம்சா
March 2, 2026, 10:24 pm
பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தோல்வி: இரண்டு வாக்குகள் தவறிவிட்டன
March 2, 2026, 10:23 pm
செந்தோசாவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது: குணராஜ்
March 2, 2026, 10:22 pm
இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
March 2, 2026, 5:39 pm
6 வயது மகளுக்கு பாலியல் கொடுமை: பாதுகாப்பு காவலர் 13 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்
March 2, 2026, 5:38 pm
சபாக் பெர்னாமில் சட்டவிரோத குடியேறிகள்: உள்நாட்டு ஆடவர் கைது
March 2, 2026, 3:29 pm
தடை செய்யப்பட்ட பொருள் கடத்தலுக்கு லஞ்சம்: அரசு ஊழியர்கள் கைது
March 2, 2026, 2:53 pm
