செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளிகளில் உள்ள திருவள்ளுவர் சிலைகளை அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை: ஜொகூர் கல்வி இலாகா விளக்கம்
ஜொகூர்பாரு:
தமிழ்ப்பள்ளிகளில் உள்ள திருவள்ளுவர் சிலைகளை அகற்ற கோரி எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை.
ஜொகூர் மாநில கல்வி இலாகா ஓர் அறிக்கையின் வாயிலாக விளக்கியது.
ஊடக தகவல்களின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி வளாகத்திலிருந்து திருவள்ளுவர் சிலைகளை அகற்ற உத்தரவு தொடர்பான வைரலான பிரச்சினையை ஜொகூர் மாநில கல்வி இலாகா தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
குறிப்பாக ஜொகூர் மாநில கல்வி இலாகா அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஜொகூர் மாநில கல்வி இயக்குநர் விரைவில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஒரு அமர்வை நடத்துவார்.
கல்வி நிறுவனங்களின் அனைத்து உறுப்பினர்களின் நல்வாழ்வையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக மத உணர்வுகள், பல்லின சமூகங்களுக்கு பாதிக்காமல் எப்போதும் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதனை மாநிலத்தில் உள்ள கல்வி இலாகா அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 3:04 pm
எம்ஏசிசி தலைமை இயக்குநராக டத்தோஶ்ரீ அப்துல் ஹலில் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்
May 13, 2026, 3:04 pm
விடுதியில் மயங்கி விழுந்த முதலாம் படிவ மாணவர் உயிரிழந்தார்
May 13, 2026, 2:27 pm
தொழில்நுட்பமே நாட்டின் எதிர்கால அஸ்திவாரம்: துணை நிதி அமைச்சர் லியூ சின் தோங்
May 13, 2026, 12:01 pm
வரலாற்றின் கறுப்புப் பக்கமான மே 13: பன்முகத்தன்மையே நாட்டின் பலம்
May 13, 2026, 11:50 am
இந்து ஆலய விவகாரத்தில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம்: பிரதமருக்கு குணராஜ் ஆதரவு
May 13, 2026, 11:49 am
லெபனானில் ட்ரோன் வெடித்ததில் மலேசிய ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை: காலிட் நோர்டின்
May 13, 2026, 11:46 am
ஜோ லோ, டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது
May 13, 2026, 10:08 am
