செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளிகளில் உள்ள திருவள்ளுவர் சிலைகளை அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை: ஜொகூர் கல்வி இலாகா விளக்கம்
ஜொகூர்பாரு:
தமிழ்ப்பள்ளிகளில் உள்ள திருவள்ளுவர் சிலைகளை அகற்ற கோரி எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை.
ஜொகூர் மாநில கல்வி இலாகா ஓர் அறிக்கையின் வாயிலாக விளக்கியது.
ஊடக தகவல்களின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி வளாகத்திலிருந்து திருவள்ளுவர் சிலைகளை அகற்ற உத்தரவு தொடர்பான வைரலான பிரச்சினையை ஜொகூர் மாநில கல்வி இலாகா தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
குறிப்பாக ஜொகூர் மாநில கல்வி இலாகா அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஜொகூர் மாநில கல்வி இயக்குநர் விரைவில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஒரு அமர்வை நடத்துவார்.
கல்வி நிறுவனங்களின் அனைத்து உறுப்பினர்களின் நல்வாழ்வையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக மத உணர்வுகள், பல்லின சமூகங்களுக்கு பாதிக்காமல் எப்போதும் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதனை மாநிலத்தில் உள்ள கல்வி இலாகா அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 2, 2026, 10:27 pm
எகிப்து, ஜோர்டானில் உள்ள 540 மாணவர்களின் நிலையை ஜொகூர் அரசு கண்காணித்து வருகிறது
March 2, 2026, 10:25 pm
பூடி95 பெட்ரோல் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 14.8 மில்லியன் பேர் பயனடைந்துள்ளனர்: அமீர் ஹம்சா
March 2, 2026, 10:24 pm
பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தோல்வி: இரண்டு வாக்குகள் தவறிவிட்டன
March 2, 2026, 10:23 pm
செந்தோசாவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது: குணராஜ்
March 2, 2026, 10:22 pm
இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
March 2, 2026, 5:39 pm
6 வயது மகளுக்கு பாலியல் கொடுமை: பாதுகாப்பு காவலர் 13 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்
March 2, 2026, 5:38 pm
சபாக் பெர்னாமில் சட்டவிரோத குடியேறிகள்: உள்நாட்டு ஆடவர் கைது
March 2, 2026, 3:30 pm
AKPS கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு வழக்கு: ஐந்து சாட்சிகள் வாக்குமூலம் வழங்கினர்
March 2, 2026, 3:29 pm
தடை செய்யப்பட்ட பொருள் கடத்தலுக்கு லஞ்சம்: அரசு ஊழியர்கள் கைது
March 2, 2026, 2:53 pm
