செய்திகள் மலேசியா
நாட்டின் பிரதமரே திருவள்ளுவரை மதிக்கும் போது தமிழ்ப்பள்ளிகளில் ஏன் திருவள்ளுவர் சிலை இருக்கக் கூடாது?: டத்தோ சிவக்குமார் கேள்வி
கோலாலம்பூர்:
நாட்டின் பிரதமரே திருவள்ளுவரை மதிக்கும் போது தமிழ்ப்பள்ளிகளில் ஏன் திருவள்ளுவர் சிலை இருக்கக் கூடாது.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இக் கேள்வியை எழுப்பினார்.
தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலை இருக்கக் கூடாது என ஜொகூர் மாநில கல்வி இலாகா சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்திய சமுதாயத்திடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பிரதமராக இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுகிறார்.
குறிப்பாக திருக்குறளின் விளக்கத்தை மலாய் மொழியில் கூறுவார்.
இந்தவொரு சூழ்நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலை இருக்கக் கூடாது என்றால் அதை நம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
ஆக ஜொகூர் மாநில கல்வி இலாகாவின் இந்நடவடிக்கையை மஹிமா வன்மையாகக் கண்டிக்கிறது.
அதே வேளையில் இது குறித்து கல்வி இலாகாவிற்கும் ஒரு கடிதத்தையும் மஹிமா அதிகாரப்பூர்வமாக அனுப்பும்.
இயக்கம் அனுப்பும் கடிதம் தானே என யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
தமிழ்ப்பள்ளிகளின் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு ஆபத்து என்றால் மஹிமா ஒருபோதும் பார்த்து கொண்டிருக்காது.
இதற்காக போராட்டம் நடத்தவும் தயங்காது என டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 2, 2026, 10:27 pm
எகிப்து, ஜோர்டானில் உள்ள 540 மாணவர்களின் நிலையை ஜொகூர் அரசு கண்காணித்து வருகிறது
March 2, 2026, 10:25 pm
பூடி95 பெட்ரோல் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 14.8 மில்லியன் பேர் பயனடைந்துள்ளனர்: அமீர் ஹம்சா
March 2, 2026, 10:24 pm
பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தோல்வி: இரண்டு வாக்குகள் தவறிவிட்டன
March 2, 2026, 10:23 pm
செந்தோசாவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது: குணராஜ்
March 2, 2026, 10:22 pm
இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
March 2, 2026, 5:39 pm
6 வயது மகளுக்கு பாலியல் கொடுமை: பாதுகாப்பு காவலர் 13 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்
March 2, 2026, 5:38 pm
சபாக் பெர்னாமில் சட்டவிரோத குடியேறிகள்: உள்நாட்டு ஆடவர் கைது
March 2, 2026, 3:30 pm
AKPS கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு வழக்கு: ஐந்து சாட்சிகள் வாக்குமூலம் வழங்கினர்
March 2, 2026, 3:29 pm
தடை செய்யப்பட்ட பொருள் கடத்தலுக்கு லஞ்சம்: அரசு ஊழியர்கள் கைது
March 2, 2026, 2:53 pm
