செய்திகள் மலேசியா
கனரக வாகனங்கள் விதிகளை பின்பற்றாததால் கோரமான விபத்துகள் நேர்கின்றன: டத்தோஸ்ரீ ஜனசந்திரன்
புத்ராஜெயா:
கனரக வாகனங்கள் விதிகளை முறையாகப் பின்பற்றாததால் கோரமான விபத்துகள் நிகழ்வதற்கு முக்கிய காரணமாகும். அதற்காக சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன.
போக்குவரத்து துறை அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன் இதனை கூறினார்.
நாட்டில் லோரி உட்பட கனரக வாகனங்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
குறிப்பாக அவ்வாகனங்களுக்கு எதிரான சட்டங்கள், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதனால் கனரக வாகனங்களில் ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர்.
அவர்களின் அதிருப்திகளும் கோபங்களும் எங்களுக்கு புரிகிறது.
ஆனால் நாட்டில் நிகழும் கோரமான விபத்துகள் தான் அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
சாலைகளில் தினசரி நடக்கும் விபத்துகளும் அதனால் ஏற்படும் மரணங்களையும் நாம் அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆக இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அரசாங்கத்தின் மீது கோபப்படுவதை நிறுத்திவிட்டு கனரக வாகன ஓட்டுநர்கள் சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
அனைத்தும் சட்டங்களுக்கு உட்பட்டு இருந்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று டத்தோஸ்ரீ ஜனசந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 9:42 pm
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரின் வெற்றியை செகாமா சட்டமன்ற தொகுதி மக்கள் உறுதி செய்ய வேண்டும்: செனட்டர் சரஸ்வதி
November 21, 2025, 5:47 pm
மகளை மீட்க பல ஆண்டுகளாக போராடி வரும் இந்திரா காந்திக்கு துணை நிற்போம்: குணராஜ்
November 21, 2025, 5:46 pm
பாலியில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை
November 21, 2025, 12:23 pm
செண்டாயானில் வெட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மீது 42 குற்றப் பதிவுகள் உள்ளன: போலிஸ்
November 21, 2025, 12:22 pm
