நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகளை மீட்க பல ஆண்டுகளாக போராடி வரும் இந்திரா காந்திக்கு துணை நிற்போம்: குணராஜ்

செந்தோசா:

மகளை மீட்க பல ஆண்டுகளாக போராடி வரும் ஒரு தாயான இந்திரா காந்திக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்  குணராஜ் ஜோர்ஜ் இதனை வலியுறுத்தினார்.

தனது மகள் பிரசன்னாவுடன் மீண்டும் இணைவதற்காக கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்திரா காந்தி  போராடி வருகிறார்.

அவரது வலிமை, கண்ணியம், அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை ஒரு தாயின் அன்பின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.

பல வருட வலி, நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் உடைக்கப்படாமல் இருக்கும் ஒரு அன்பு இதுவாகும்.

இந்திரா காந்தியின் வழக்கு வெறும் சட்டப்பூர்வமான விஷயம் அல்ல.

இதுவொரு தாயின் போராடமாகும்.

மேலும்  தாமதப்படுத்தப்பட்ட நீதி மிக எளிதாக மறுக்கப்பட்ட நீதியாக மாறும் என்பதை நினைவூட்டுகிறது.

ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக, இந்தப் பிரச்சினையில் மிக உயர்ந்த மட்டத்தில் தீர்க்கமான தலையீடு தேவை என்பது தெளிவாகிறது.

ஆக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் போலிஸ் மீதான எனது முழு நம்பிக்கையையும் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

ஒரு தாய் தனது குழந்தையை மீண்டும் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை.

இந்த துயரம் வெளிப்படுவதை நாடு நீண்ட காலமாகக் கவனித்து வருகிறது.

இந்திரா காந்தி அனுபவித்த வலி அவருக்கு மட்டும் உரியது அல்ல.

ஒவ்வொரு பெற்றோரும், நியாயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மலேசியரும், பாரபட்சம் அல்லது தாமதம் இல்லாமல் நீதி நிலைநாட்டப்படுவதைக் காண விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் அதை உணர்கிறார்கள்.

நீதிக்கான ஒரு தாயின் கூக்குரல் இறுதியாக பதிலளிக்கப்படுவதை உறுதிசெய்ய, அரசாங்கம், நிறுவனங்கள், சிவில் சமூகம் மறகுடிமக்கள் ஒன்றிணையும் தருணமாக இது இருக்கட்டும்.

நான் இந்திரா காந்தியுடன் நிற்கிறேன்.
என்னை போல் அனைவரும் அவருக்கு துணை நிற்க வேண்டும் என குணராஜ் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset