செய்திகள் மலேசியா
குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
குஸ்கோப் நிதி திட்டங்களால் கிட்டத்தட்ட 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
கடந்த 2024 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் மொத்தம் 249.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு நிதித் திட்டங்களால் மொத்தம் 2,645 இந்திய தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.
இந்த முயற்சிகளில் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (ஸ்பூமி), இந்திய பெண்கள் அதிகாரமளிப்புக்கான சிறப்பு நிதி (பெண்), பேங்க் ரக்யாத் இந்திய தொழில்முனைவோர் நிதி (பிரிவ்-ஐ), எஸ்எம்இ வங்கியின் இந்திய தொழில்முனைவோருக்கான வாணிகம் நிதி ஆகியவை அடங்கும்.
தேசிய தொழில்முனைவோர் கொள்கை 2030 உள்ளடக்கிய, சீரான நிலையான சமூக பொருளாதார வளர்ச்சியை வலியுறுத்தும் மலேசிய மதானியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க,
இந்திய தொழில்முனைவோர் உட்பட நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் குஸ்கோப் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.
ஸ்பூமி, பெண், பிரிவ்-ஐ, வணிகம் உள்ளிட்ட இந்திய தொழில்முனைவோருக்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதன் நிலை குறித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 4:56 pm
பெர்சத்து தலைவர்கள் கூடுவதால் டான்ஸ்ரீ மொஹைதின் வீடு இன்றிரவு ஒரு பரபரப்பான இடமாக மாறும்?
November 18, 2025, 3:38 pm
மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது
November 18, 2025, 3:30 pm
மலேசிய மக்களின் தரவு பாதுகாப்பானது; MyGov சூப்பர் செயலி தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது: கோபிந்த் சிங் உறுதி
November 18, 2025, 11:23 am
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
November 18, 2025, 11:22 am
தேமுவை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் வரும்; கவலைப்பட வேண்டாம்: டத்தோ அசோஜன்
November 18, 2025, 11:21 am
தேமுவை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ தேவமணி
November 18, 2025, 11:20 am
தேமுவை விட்டு வெளியேறுவது தான் மஇகாவின் சிறந்த முடிவு; இழுபறி வேண்டாம்: கோகிலன் பிள்ளை
November 18, 2025, 11:19 am
கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
November 18, 2025, 9:53 am
